நேற்று நள்ளிரவு எரிபொருள் விலை மாற்றம் அறிவிக்கப்படவில்லை!!!!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

நேற்று நள்ளிரவு எரிபொருள் விலை மாற்றம் அறிவிக்கப்படவில்லை!!!!

விலைச் சூத்திரத்தின் அடிப்படையில் எரிபொருள் விலை மாற்றம் குறித்து எந்த அறிவிப்பும் நிதி அமைச்சிடமிருந்து வெளியாக வில்லையென தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

நேற்று (11) நள்ளிரவு முதல் எரிபொருள் விலை மாற்றம் மாற்றம் இடம்பெறும் என நிதி அமைச்சு ஏற்கனவே அறிவித்திருந்தது.

எரிபொருள் விலை தொடர்பில் தீர்மானிக்கும் விலைச் சூத்திரக் குழு நேற்று (11) கூடுவதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

ஒவ்வொரு மாதமும் 10 ஆம் திகதி எரிபொருள் விலைச் சூத்திரக் குழு கூடி, புதிய எரிபொருள் விலை குறித்து தீர்மானத்தை மேற்கொண்டு வருகின்றது.

இருப்பினும், கடந்த 10 ஆம் திகதி விடுமுறை தினம் என்பதனால் அக்குழு நேற்று கூடுவதாகவும் குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்நிலையிலேயே இந்த விலை மறுசீரமைப்பு நேற்று இடம்பெறவில்லையென நிதி அமைச்சு வட்டாரங்கள் கூறியுள்ளன.

உலக சந்தையில் ஒரு பீப்பாய் மசகு எண்ணெய்யின் விலை 66 டொலர்களாக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.