
நேற்று (11) நள்ளிரவு முதல் எரிபொருள் விலை மாற்றம் மாற்றம் இடம்பெறும் என நிதி அமைச்சு ஏற்கனவே அறிவித்திருந்தது.
எரிபொருள் விலை தொடர்பில் தீர்மானிக்கும் விலைச் சூத்திரக் குழு நேற்று (11) கூடுவதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.
ஒவ்வொரு மாதமும் 10 ஆம் திகதி எரிபொருள் விலைச் சூத்திரக் குழு கூடி, புதிய எரிபொருள் விலை குறித்து தீர்மானத்தை மேற்கொண்டு வருகின்றது.
இருப்பினும், கடந்த 10 ஆம் திகதி விடுமுறை தினம் என்பதனால் அக்குழு நேற்று கூடுவதாகவும் குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்நிலையிலேயே இந்த விலை மறுசீரமைப்பு நேற்று இடம்பெறவில்லையென நிதி அமைச்சு வட்டாரங்கள் கூறியுள்ளன.
உலக சந்தையில் ஒரு பீப்பாய் மசகு எண்ணெய்யின் விலை 66 டொலர்களாக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.