தோட்டத் தொழிலாளர்களுக்கான விஷேட கொடுப்பனவு மே மாதம் முதல் !!
Posted by Yazh NewsAuthor-
மே மாதம் 1ஆம் திகதி முதல் தோட்டத்தொழிலாளர்களுக்கு 50 ரூபா விஷேட கொடுப்பனவை வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டிருப்பதாக பெருந்தோட்ட தொழிற்துறை அமைச்சர் நவீன் திஸ்ஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
பாராளுமன்ற கட்டிடத் தொகுதியில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அமைச்சர் இதனை தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான அமைச்சரவை ஆவணம் அடுத்தவார அமைச்சரவையில் சமர்பிக்கப்படும் என்றும் அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.
உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.