கணவன் மனைவியை விபத்துக்குள்ளாக்கி தப்பிச் சென்ற நபர் கைது!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

கணவன் மனைவியை விபத்துக்குள்ளாக்கி தப்பிச் சென்ற நபர் கைது!

அம்பலாந்தொடை பெலிகால்கொட வீதியில் காரொன்று சைக்கிள் ஒன்றுடன் மோதுண்டு கணவன் மற்றும் மனைவி காயமடைந்ததை தொடர்ந்து அம்பந்தோட்டை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

நேற்றிரவு (21) 08:30 மணியளவில் இந்த விபத்து நடை பெற்றதுடன், காயமடைந்த ஜோடியிக் கணவன் படுகாயம் அடைந்துள்ளதாக அம்பலாந்தோடை பொலிசார் தெரிவித்தனர்.

எவ்வாறாயினும் வாகன விபத்தினை ஏற்படுத்திய கார் வண்டி சாரதி காயமடைந்தவர்களை அம்பாந்தோட்டை வைத்தியசாலையில் அனுமதித்து, தலைமறைவாகியதாக பொலிசார் தெரிவித்தனர்.

பின்பு, தலைமறைவாகிய நபரை அம்பலாந்தொடை பொலிசார் கைது செய்து, வைத்திய பரிசோதனையின் பின்னர் கார் சாரதி மதுமானம் அருந்தியிருந்ததாக தகவல் அறியக் கிடைத்தது.

இது சம்பந்தமாக பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.