மு.கா - தமிழ் கூட்டமைப்பு மோதிக்கொள்வது நல்லதல்ல !!!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

மு.கா - தமிழ் கூட்டமைப்பு மோதிக்கொள்வது நல்லதல்ல !!!

அரசியல்வாதிகளின் தனிப்பட்ட போக்கினால் இவ்விரண்டு சமூகங்களும் பிரிந்து விடக்கூடாது. தமிழ்த்தேசியக்கூட்டமைப்பும், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசும் சண்டைபோடுவதற்கு முதல் எங்களுக்குள் பேசிப் பிரச்சினைகளை தீர்த்துக் கொள்ள வேண்டும் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும், நகர திட்டமிடல் நீர் வழங்கல் மற்றும் உயர் கல்வி அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.

கிழக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினரும், சம்மாந்துறை பிரதேச சபையின் எதிர்க்கட்சி தலைவருமான ஐ.எல்.எம்.மாஹீரின் முயற்சியினால் நகர திட்டமிடல் நீர் வழங்கல் மற்றும் உயர் கல்வி அமைச்சின் 36 மில்லியன் நிதியில் புனர்நிர்மாணம் செய்யப்பட்ட சம்மாந்துறை அன்வர் இஸ்மாயில் மாவத்தை, சம்மாந்துறை கல்லரிச்சல் சிறுவர் பூங்கா, கைகாட்டி சிறுவர் பூங்கா என்பனவற்றை பொது மக்கள் பாவணைக்கு திறந்து வைக்கும் நிகழ்வு நேற்றுமுன்தினம்(10) சம்மாந்துறை கைகாட்டிச் சந்தியில் பிரதேச சபை உறுப்பினர் எஸ்.நளீம் தலைமையில் இடம்பெற்றது. இதில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றுகையிலே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அமைச்சர் அங்கு தொடர்ந்தும் உரையாற்றுகையில், இந்த வருடம் தேர்தல் வருடமாகும். யார் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் ஏற்கனவே நடைபெற வேண்டிய தேர்தலை காலம் தாழ்த்தினாலும் இவ்வருடக் கடைசியில் ஜனாதிபதித் தேர்தலையாவது நாட்டு மக்கள் முகங்கொடுக்க வேண்டியுள்ளது. தேசிய ரீதியாக ஒரு தேர்தலுக்கு நாம் தயாராக வேண்டும்.

இந்நாட்டினுடைய அரசியல் போக்கினை சிறுபான்மை சமூகமாக தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களுடைய ஒற்றுமையினால் மாற்றியமைக்க முடியும். அரசியல்வாதிகளின் தனிப்பட்ட போக்கினால் இவ்விரண்டு சமூகங்களும் பிரிந்து விடக்கூடாது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசும் சண்டைபோடுவதற்கு முதல் எங்களுக்குள் பேசிப் பிரச்சினைகளை தீர்த்துக் கொள்ள வேண்டும்.

நன்றி

சம்மாந்துறை கிழக்கு தினகரன் நிருபர்
Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.