செயற்கை மழைத் திட்டம் கைவிடப்பட்டது!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

செயற்கை மழைத் திட்டம் கைவிடப்பட்டது!

கடந்த வாரம் மவுஸ்ஸகலையில் இலங்கை மின்சார சபையினால் செயற்கை மழைத் திட்டமொன்று பரிசோதிக்கப்பட்டதை அடுத்து திட்டம் கைவிடப்பட்டது.

கடந்த 22ஆம் திகதி மவுஸ்ஸகலை பகுதியில் நடாத்தப்பட்ட பரிசோதனையின் பெறுபேறுகள் எதிர்பார்த்ததைவிட குறைவாக இருந்தது, குறிப்பாக மேகம் மற்றும் ஈரப்பதம் இல்லாமை காரணமாகவே இத்திட்டம் கைவிடப்பட்டதாக இலங்கை மின்சார சபை தெரிவித்தது.

குறிப்பிட்ட திட்டத்தின் மூலம் ஏற்பட்ட இழப்புகளை கருத்தில் கொண்டு, இந்த திட்டத்தை இடைநிறுத்தம் செய்ய எரிசக்தி அமைச்சு முடிவு செய்தது.

தாய்லாந்தில் தொழில்நுட்ப நிபுணத்துவத்தின் மூலம் மேற்கொள்ளப்பட்ட செயற்கை மழைத் திட்டம், நாட்டில் வறட்சிக்கான பிரச்சினைகளை தீர்க்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.