செயற்கை மழை திட்டத்தின் இரண்டாம் கட்டம் இன்று காசல்ரி நீர்த்தேக்க பிரதேசங்களில்!!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

செயற்கை மழை திட்டத்தின் இரண்டாம் கட்டம் இன்று காசல்ரி நீர்த்தேக்க பிரதேசங்களில்!!

இலங்கை விமானப்படை செயற்கை மழையினை பொழிய வைக்கும் ரேன் போfல் மிசன் (RAINFALL MISSION) இரண்டாம் கட்டம் இன்று(23) காசல்ரி நீர்த்தேக்க பகுதியில் நடைமுறைபடுத்தவுள்ளனர்.

காசல்ரி மற்றும் மவுஸ்ஸகலை ஆகிய நீர்த்தேங்களை அண்டிய பிரதேசங்களில் செயற்கை மழை பொழிய வைப்பதற்காக இலங்கை விமானப்படை நேற்று (22) ஆரம்பித்த ரேன் போfல் மிசன் ( RAINFALL MISSION) இரண்டாம் நாளான இன்று(23) காசல்ரி நீர்தேக்க பிரதேசங்களில் இன்று நடைமுறைப்படுத்தப்படவுள்ளன.

நேற்று (22) மவுஸ்ஸாகலை நீர்த்தேக்க பிரதேசத்தில் செயற்கை மழை பொழிய வைக்கும் திட்டத்திற்காக இலங்கை விமானப்படையின் வய் 12 (Y12) ரக விமானம் மூலம் வெற்றிகரமாக நடைபெற்று முடிந்தது.

இலங்கை மின்சார சபையின் வேண்டுகொளுக்கு இணங்க தாய்லாந்தில் இருந்து கொண்டுவரப்பட்ட செயற்கை மழை உற்பத்தியில் பேட்டன் அனுமதிப்பத்திரம் இருக்கும் நிறுவனத்திலிருந்து அதிகாரிகள் இலங்கைக்கு வந்தனர்.

இந்த வேலைத்திட்டமானது காசல்ரி மற்றும் மவுஸ்ஸாகலை ஆகிய நீர்த்தேக்க பிரதேசங்களில் 14 நாட்களுக்கு நடாத்த திட்டமிடப்பட்டுள்ளது.

Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.