
நேற்று (24) இரவு 07:15 மணியளவில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.
நுவரெலியா பிரதேசத்தில் சுற்றுலா சென்று, அம்பாரை நோக்கி வீடு திரும்பும் போதே இவ்வாறு விபத்துக்காகியுள்ளது.
விபத்துக்காக்கப்பட்ட நேரத்தில் பஸ் வண்டி மிக வேகமாக செலுத்தப்பட்ட காரணத்தால் சாரதிக்கு வண்டியினை கட்டுப்படுத்த இயலாமல் சென்றதால் அருகிலிருந்த பள்ளத்தாக்கில் விழுந்துள்ளது.

காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக வலபனை மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
விபத்து தொடர்பாக மேலதிக விசாரணைகள் மேற்கொண்டு வருகின்றனர்.