வலபனை பஸ் வண்டி விபத்தில் ஒருவர் பலி, மற்றும் 54 பேர் படு காயம் !

advertise here on top
Join YazhNews WhatsApp Community

வலபனை பஸ் வண்டி விபத்தில் ஒருவர் பலி, மற்றும் 54 பேர் படு காயம் !

வலபனை-ராகல வீதியில் மகவங்குவை பிரதேசத்தில் பஸ் வண்டியொன்று தலைகீழாக கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் இருவர் உயிரிழந்தும் 54 பேர் காயமடைந்துமுள்ளனர்.

நேற்று (24) இரவு 07:15 மணியளவில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.

நுவரெலியா பிரதேசத்தில் சுற்றுலா சென்று, அம்பாரை நோக்கி வீடு திரும்பும் போதே இவ்வாறு விபத்துக்காகியுள்ளது.

விபத்துக்காக்கப்பட்ட நேரத்தில் பஸ் வண்டி மிக வேகமாக செலுத்தப்பட்ட காரணத்தால் சாரதிக்கு வண்டியினை கட்டுப்படுத்த இயலாமல் சென்றதால் அருகிலிருந்த பள்ளத்தாக்கில் விழுந்துள்ளது.


காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக வலபனை மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

விபத்து தொடர்பாக மேலதிக விசாரணைகள் மேற்கொண்டு வருகின்றனர்.
Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.