
நேற்று கைது செய்யப்பட்ட 38 வயதுடைய சந்தேக நபர் கிரிபத்கொட, தெம்பிலிகஸ்முல்ல பிரதேசத்தை சேர்ந்தவராவார். சந்தேக நபரிடம் விசாரித்த போது இந்த ஜீப் வண்டி போக்குவரத்து திணைக்களத்தில் பதிவு செய்யப்படாமல் இருப்பதாகவும், இது ஜப்பானில் திருடப்பட்ட வாகனம் என்றும் உண்மைகள் கசிந்தன.
இந்த ஜீப் வண்டியின் சந்தை மதிப்பானது 4 கோடி பெறிமதி எனவும் பொலிஸ் ஊடக பேச்சாளார் காரியாலம் தெரிவித்தது.
மேலும், பேரூந்து சாலை அனுமதிப்பத்திரம் சம்பந்தமாக ஏற்பட்ட சர்ச்சை தொடர்பாக மொரட்டுமுல்ல - பிலியந்தல - கொஸ்பெலேன பிரதேசங்களில் சென்ற வாரம் இடம் பெற்ற இரட்டை கொலை சம்பவத்தில் உபயோகிக்கப்பட்ட வாகனம் ஒன்றிம் பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டுள்ளது.
பொலிஸ் சிறப்பு பிரிவினால் கொஸ்பெலேன பாலத்தின் அருகாமையில் சோதனைகள் நடாத்தப்பட்டன.
சென்ற வாரம் வழக்கு சம்பந்தமாக சென்று வீடு திரும்பும் போதே கொஸ்பெலேன பாலத்தின் அருகாமையில் கொலை செய்யப்பட்டிருந்தனர்.