ஜப்பானில் திருடப்பட்ட 4 கோடி ஜீப் வண்டி கிரிபத்கொடையில் வைத்து பிடிபட்டது!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

ஜப்பானில் திருடப்பட்ட 4 கோடி ஜீப் வண்டி கிரிபத்கொடையில் வைத்து பிடிபட்டது!

சட்டவிரோதமாக பாகங்களாக இலங்கைக்கு கொண்டு வந்து ஜப்பானில் தயார் செய்யப்பட்ட டொயோட்டா வீ.8 வகையான ஜீப் வாகனமொன்றை வைத்திருந்த சந்தேக நபர் ஒருவரை பானந்துறை - ஊழல் எதிரிப்பு பிரிவு அதிகாரிகளை கொண்ட குழுவினரால் கைது செய்துள்ளது.
 
நேற்று கைது செய்யப்பட்ட 38 வயதுடைய சந்தேக நபர் கிரிபத்கொட, தெம்பிலிகஸ்முல்ல பிரதேசத்தை சேர்ந்தவராவார். சந்தேக நபரிடம் விசாரித்த போது இந்த ஜீப் வண்டி போக்குவரத்து திணைக்களத்தில் பதிவு செய்யப்படாமல் இருப்பதாகவும், இது ஜப்பானில் திருடப்பட்ட வாகனம் என்றும் உண்மைகள் கசிந்தன. 

இந்த ஜீப் வண்டியின் சந்தை மதிப்பானது 4 கோடி பெறிமதி எனவும் பொலிஸ் ஊடக பேச்சாளார் காரியாலம் தெரிவித்தது. 

மேலும், பேரூந்து சாலை அனுமதிப்பத்திரம் சம்பந்தமாக ஏற்பட்ட சர்ச்சை தொடர்பாக மொரட்டுமுல்ல - பிலியந்தல - கொஸ்பெலேன பிரதேசங்களில் சென்ற வாரம் இடம் பெற்ற இரட்டை கொலை சம்பவத்தில் உபயோகிக்கப்பட்ட வாகனம் ஒன்றிம் பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டுள்ளது. 

பொலிஸ் சிறப்பு பிரிவினால் கொஸ்பெலேன பாலத்தின் அருகாமையில் சோதனைகள் நடாத்தப்பட்டன. 

சென்ற வாரம் வழக்கு சம்பந்தமாக சென்று வீடு திரும்பும் போதே கொஸ்பெலேன பாலத்தின் அருகாமையில் கொலை செய்யப்பட்டிருந்தனர்.












Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.