4 கோடி தங்கத்துடன் 9 பேர் விமான நிலையத்தில் சிக்கிக் கொண்டனர்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

4 கோடி தங்கத்துடன் 9 பேர் விமான நிலையத்தில் சிக்கிக் கொண்டனர்!

இலங்கை ரூ. 4 கோடி பெறுமதியான தங்கத்தினை சட்டவிரோதமாக இலங்கைக்கு எடுத்து வந்த 09 நபர்களை கட்டுநாயக்க விமான நிலைய சுங்க அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

இந்த தங்க ஆபரணங்ளை அவர்களின் வாய்களினுள்ளும், உடைகளினுள்ளும், பொதிகள் தள்ளும் விமான நிலைய தள்ளு வண்டிகளினுள்ளும் மறைத்து வைத்திருந்ததாக சுங்க அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதன் போது 59 தங்க துண்டுகள் கைப்பற்றப்பட்டதுடம் அதன் பெறுமது மூன்று கோடியே தொன்னூற்றிரண்டு இலட்சம் என மதிப்பிடப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட நபர்களில் மூவர் இலங்கையர்கள் எனவும், ஆறு பேர் இந்தியர்கள் எனவும் இனங்காணப்பட்டனர். இலங்கையர்கள் மூவரும் வவுனியா, கண்டி மற்றும் கடுகண்ணாவையை சேர்ந்தவர்களும், இந்தியர்கள் ஆறு பேரும் தமிழ் நாட்டைச் சேர்ந்தவர்களுமாகும்.
Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.