சில மாகாணங்களுக்கு பகல் 2 மணிக்கு பிறகு மழை !

advertise here on top
Join YazhNews WhatsApp Community

சில மாகாணங்களுக்கு பகல் 2 மணிக்கு பிறகு மழை !

மேல்,சபரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும், காலி , மாத்தறை மாவட்டங்களில் சில இடங்களில் பகல் 2:00 மணிக்கு பிறகு மழை அல்லது இடியுடன் கூடிய மழை பொழியக்கூடிய சாத்தியக்கூறுகள் இருப்பதாக வளிமண்டல திணைக்களம் தெரிவித்தது.

இடியுடன் கூடிய மழை பொழியும் போது அப்பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடியதாக இருப்பதனால், அனர்த்தங்களிலிருந்து பாதுகாத்து கொள்ள உரிய நடவடிக்கைகளை எடுக்குமாறு வளிமண்டல திணைக்களம் மக்களிடம் பணிவன்புடன் கேட்டுக் கொள்கிறார்கள்.

மேலும் காலி இலிருந்து அம்பாந்தோட்டை மற்றும் பொத்துவொல்லிருந்து மட்டக்களப்பு வரையுள்ள கடலோர பிரதேசங்களில் சில இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பொழியக்கூடிய சாத்திதக்கூறுகள் இருப்பதாகவும் வளிமண்டல திணைக்களம் அறிவித்தது.

புத்தளத்திலிருந்து கொழும்பு, காலினாகிய கடலோரங்களிலும் மாலை அல்லது இரவு நேரங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பொழியக்கூடும்.

நாட்டின் எல்லா கடலோர பிரதேசங்களிலும் ஈசான திசையில் காற்று மணித்தியாலத்திற்கு 20-30கி. மீ. வேகத்தில் வீசும் எனவும் வளிமண்டல திணைக்களம் தெரிவித்தது.

மேலும் காலியிலிருந்து அம்பாந்தோட்டை மற்றும் பொத்துவில் ஆகிய கடலோர பிரதேசங்களில் மணிக்கு 40 கி. மீ. வேகத்தில் காற்று வீசும் எனவும் திணைக்களம் அறிவித்தது.

இடியுடன் கூடிய மழை நாட்டின் எல்லா பாகங்களிலும் எதிர்ப்பார்க்கலாம் எனவும் தற்காலிக பலத்த காற்றும் வீசக்கூடும். கடலோர பிரதேசங்களில் பலத்த காற்றினையும் எதிர்ப்பார்க்கலாம்.
Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.