சுற்றுலா வந்த இந்திய வாலிபர் வர்த்தகம் செய்து மாட்டிக் கொண்டார் !!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

சுற்றுலா வந்த இந்திய வாலிபர் வர்த்தகம் செய்து மாட்டிக் கொண்டார் !!

சுற்றுலா வீசாவுடன் இலங்கைக்கு வந்த இந்திய வாலிபர் ஒருவர் வர்த்தகத்தில் ஈடுபட்ட்ட சம்பவம் தொடர்பாக பொலன்னறுவை பொலிசாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

நேற்று (18) பகல் 01:30 மணியளவில் பொலன்னறுவை பொலிஸ் தொகுதி கதுர்வெல பிரதேசத்திலேயே இந்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.

பொலன்னறுவை பொலிஸ் நிலைய அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலினை தொடர்ந்து, குடிவரவு மற்றும் குடியகல்வு விதிகளை மீறி சுற்றுல வீசாவுடன் நாட்டிற்கு வந்து வர்த்தகத்தில் ஈடுபட்டதன் அடிப்படையில் கைது செய்யப்பட்டார்.

கைது செய்யப்பட்ட வாலிபர் 20 வயதுடைய இந்தியர் என பொலிஸ் நிலையம் அறிவித்தது.

சந்தேக நபர் இன்று (19) பொலன்னறுவை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்படவுள்ளார்.

இது தொடர்பாக பொலன்னறுவை பொலிஸ் நிலையம் மேலதிக விசாரணைகளை நடாத்தி வருகின்றனர்.
Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.