
நேற்ற்ய் மாலை 6 மணியளவில் வெலிபன்ன நெடுஞ்சாலை நுழைவிற்கருகாமையில் இச்சம்பவம் நடந்துள்ளது.
அதிக வேகத்தில் வந்த பஸ் வண்டி, மின் கம்பமொன்றில் மோதி வீடொன்றிற்கருகில் தலைகீழாய் விழுந்துள்ளது.
விபத்தின் போது உயிரிழந்த நபர் பஸ் வண்டியினுள் பிரயாணம் செய்த 41 வயதுடைய அஹுங்கலை பிரதேசத்தை சேர்ந்தவராவார்.
காயமடைந்தவர்களில் பாதையில் சென்று கொண்டிருந்த அம்மா மற்றும் மகளும் அடங்குவர்.
காயமடைந்தோர் நாகொட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட பஸ் வண்டி சாரதி குடிபோதையில் இருந்ததாக வெலிபன்ன பொலிசார் தெரிவித்தனர்.