தலைகீழாக விழுந்த சொகுசு பஸ் வண்டி - ஒருவர் பலி மற்றும் 25 பேர் காயம்

advertise here on top
Join YazhNews WhatsApp Community

தலைகீழாக விழுந்த சொகுசு பஸ் வண்டி - ஒருவர் பலி மற்றும் 25 பேர் காயம்

மதுகம அளுத்கம பாதையிக் வெலிபன்ன பிரதேசத்தில் சொகுசு பஸ் வண்டி விபத்துக்குள்ளாகியதை அடுத்து ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் 25 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

நேற்ற்ய் மாலை 6 மணியளவில் வெலிபன்ன நெடுஞ்சாலை நுழைவிற்கருகாமையில் இச்சம்பவம் நடந்துள்ளது.

அதிக வேகத்தில் வந்த பஸ் வண்டி, மின் கம்பமொன்றில் மோதி வீடொன்றிற்கருகில் தலைகீழாய் விழுந்துள்ளது.

விபத்தின் போது உயிரிழந்த நபர் பஸ் வண்டியினுள் பிரயாணம் செய்த 41 வயதுடைய அஹுங்கலை பிரதேசத்தை சேர்ந்தவராவார்.

காயமடைந்தவர்களில் பாதையில் சென்று கொண்டிருந்த அம்மா மற்றும் மகளும் அடங்குவர்.

காயமடைந்தோர் நாகொட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

கைது செய்யப்பட்ட பஸ் வண்டி சாரதி குடிபோதையில் இருந்ததாக வெலிபன்ன பொலிசார் தெரிவித்தனர்.

Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.