சுற்றுலா சென்ற பஸ் வண்டி விபத்துக்குள்ளாகியது - 13 மாணவர்கள் வைத்தியசாலையில்

advertise here on top
Join YazhNews WhatsApp Community

சுற்றுலா சென்ற பஸ் வண்டி விபத்துக்குள்ளாகியது - 13 மாணவர்கள் வைத்தியசாலையில்

அம்பலந்தோட்டை, தெஹிககலந்த பிரதேசத்தில் பாடசாலை மாணவர்கள் சுற்றுலா சென்ற தனியார் பஸ் வண்டி விபத்திற்குள்ளாகி, 13 பாடசாலை மாணவர்கள் சிறு காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இன்று (19) காலை 08:30 மணியளவில் இந்த விபத்து நடந்துள்ளது.

சுற்றுலா சென்று கொண்டிருந்த தனியார் பஸ் வண்டி இலங்கை போக்குவரத்து சபை பஸ் ஒன்றிற்கு பின் புறமாய் மோதுண்டு விபத்துக்குள்ளாகியது.

விபத்துக்குள்ளாகிய இரு பஸ் வண்டிகளும் தங்காலை நோக்கி அம்பாந்தோட்டையிலொருந்து பிரயாணம் செய்கையில், இலங்கை போக்குவரத்து பஸ் வண்டி பயணி ஒருவரை ஏற்றுவதற்காக திடீரென நிறுத்தியதன் காரணமாக இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.

இவ்வாறு விபத்துக்குள்ளாகி இருக்கும் காலி மகிந்த வித்தியாலய மாணவர்களை சுற்றுலாக்காக காலை 5 மணியளவில் காலியிலிருந்து புறப்ப்ட்டு அம்பாந்தோட்டையில் பல இடங்களை பார்வையிடுத்ற்காக இருந்தார்கள். 

விபத்துக்குள்ளாகிய பஸ் வண்டியினுள் இருந்த இரு ஆசிரியர்கள் சிறு காயங்களுடன் அம்பாந்தோட்டை பெரிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அம்பலந்தோட்டை பொலிச் நிலையம் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.