
10 மாவட்டங்களுக்கு இன்று (24) அதிவெப்ப கால நிலை நிலவும் என வளிமண்டல திணைக்களம் அறிவித்திருக்கின்றது.
இதனடிப்படையில் மேற்குறிப்பிட்ட மாவட்டங்களில் இருக்கும் மக்கள் அவதானத்துடன் இருக்குமாறு வளிமண்டல திணைக்களம் தெரிவிக்கிறது.
விசேடமாக வெயில் அதிகமாய் இருக்கும் கால நிலை காலங்களில் கூடிய அளவு நீர் பருகுமாறும், நிழல் பிரதேசங்களில் இருக்குமாறும் வளிமண்டல திணைக்களம் வலியுறுத்துகிறது.