கழுத்தை அறுத்து கொன்ற நிலையில் பெண்ணின் சடலம் மீட்பு!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

கழுத்தை அறுத்து கொன்ற நிலையில் பெண்ணின் சடலம் மீட்பு!


மேல் கொஸ்கம, புஸ்ஸல்லாவ ரப்பர் தொழிற்சாலைக்கு அருகில், கழுத்தை அறுத்து கொலை செய்யப்பட்ட நிலையில் பெண்ணொருவரின் சடலம் இன்று (23) அன்று மீட்கப்பட்டுள்ளதாக கொஸ்கம பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


அவிசாவளை, புவக்பிட்டிய, அஸ்வத்த வடக்கு, நுககஹவத்த பகுதியைச் சேர்ந்த இரண்டு குழந்தைகளின் தாயான 49 வயதுடைய செபாலகே மல்லிகா சமன்மாலி என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.


குறித்த பெண் ரப்பர் பால் வெட்டும்  தொழிலாளியாக வேலை செய்து வந்ததாகவும், காலையில் வேலைக்குச் சென்று கொண்டிருந்த போது  அவரைத் துரத்திச் சென்ற ஒருவர்  கூர்மையான ஆயுதத்தால் தாக்கியதாகவும் பொலிஸாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது 


இந்தக் கொலை தொடர்பாக இதுவரை எவரும் கைது  செய்யப்படவில்லை எனவும், மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.