மட்டக்களப்பு ஸ்ரீ மங்களாராம விகாரையின் பிரதம குருவனான அம்பிட்டிய சுமண ரதன தேரர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அம்பாறை உஹன பொலிஸ் நிலையத்தில் ஒழுங்கீனமாக நடந்து கொண்ட சம்பவத்தின் அடிப்படையில் தேரர் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
உஹன பொலிஸாரால் கைது செய்யப்பட்ட சந்தேக நபரின் குழந்தைகளை முச்சக்கர வண்டியில் பாதுகாப்பற்ற முறையில் கொண்டு செல்வதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில், அம்பிட்டிய சுமனரத்ன தேரர் காவல் நிலையத்திற்குள் இவ்வாறு நடந்து கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது. (யாழ் நியூஸ்)