சவூதி நிதியுதவியுடன் இலவச கண்புரை இலவச சத்திர சிகிச்சை முகாம்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

சவூதி நிதியுதவியுடன் இலவச கண்புரை இலவச சத்திர சிகிச்சை முகாம்!



சவூதி அரேபியாவின் நிவாரணம் மற்றும் மனிதநேயப் பணிகளுக்கான மன்னர் சல்மான் மையம், அல் பஷர் சர்வதேச அமைப்புடன் இணைந்து நடாத்தும் இலவச கண்புரை (CATARACT) சத்திர சிகிச்சை முகாம் எதிர்வரும் நவம்பர் 3 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை முதல் 16 ஆம் திகதி சனிக்கிழமை வரை ஹம்பாந்தோட்டை மற்றும் காத்தான்குடி பகுதிகளில் நடைபெறவுள்ளது.

அந்தவகையில், சத்திர சிகைச்சைக்கு நோயாளர்களைத் தெரிவு செய்யும் பரிசோதனை முகாம்கள் பின்வரும் இடங்களில் நடைபெறவுள்ளன.

இன்றைய தினம் (29) காலை 9 மணிக்கு கொழும்பு மருதானை ஏ.எம்.வை.எஸ்(AMYS) சிலும் மாலை 4 மணிக்கு தெஹிவளையிலுள்ள மஸ்ஜித் பாவக்கரிலும் இடம்பெறும்.

அதுபோன்று நாளை 30 புதன்கிழமை காலை 9 மணிக்கு பொல்கஹவெலயில் அமைந்துள்ள கல்யாண மண்டபம், பண்டாவ என்ற இடத்திலும் மாலை 4 மணிக்கு ஓட்டமாவடி தாருஸ்ஸலாம் பள்ளிவாசலிலும் இடம்பெறும்.

நாளை மறுநாள் 31ஆம் திகதி வியாழக்கிழமை காலை 9 மணிக்கு காத்தான்குடி ஆதார வைத்தியசாலையிலும் அன்றைய தினம் மாலை 4 மணிக்கு கல்முனை ஆதார வைத்தியசாலை (வடக்கு) யிலும் இடம்பெறும்.

எனவே, கண்புரை (CATARACT) சத்திர சிகிச்சை செய்ய உள்ளவர்கள் மேற்கூறிய இடங்களில் தங்களைப் பரிசோதித்து பதிவு செய்து கொள்ளுமாறு ஏற்பாட்டாளர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.


-எம்.எஸ்.எம்.ஸாகிர்


Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.