2024 உயர்தரப் பரீட்சை தொடர்பிலான முக்கிய அறிவிப்பு!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

2024 உயர்தரப் பரீட்சை தொடர்பிலான முக்கிய அறிவிப்பு!


2024 ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தரப் பரீட்சை பிற்போடப்படாது, திட்டமிட்டபடி நடைபெறும் என பரீட்சைகள் திணைக்களம் இன்று அறிவித்துள்ளது. 


க.பொ.த உயர்தரப் பரீட்சை நவம்பர் 25 ஆம் திகதி முதல் டிசம்பர் 20 ஆம் திகதி வரை நடத்தப்படும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார். 


இன்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர், பரீட்சைகள் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் இருந்து மாத்திரம் பரீட்சை நேர அட்டவணையை பதிவிறக்கம் செய்யுமாறு மாணவர்களிடம் மேலும் கேட்டுக்கொண்டார். 


பரீட்சைக்கான திகதி மார்ச் மாதம் தீர்மானிக்கப்பட்டதாகத் தெரிவித்த அவர், தற்போது சமூக ஊடகங்களில் பரீட்சை தொடர்பாக பல தவறான தகவல்கள் பகிரப்படுவதாகவும் சுட்டிக்காட்டினார்.


“தயவுசெய்து பரீட்சை திணைக்களம் மற்றும் அதன் உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் வெளியிடப்பட்ட உத்தியோகபூர்வ அறிவிப்புகள் மற்றும் சுற்றறிக்கைகளை மட்டும் பின்பற்றவும். தற்போது பரப்பப்படும் பொய்யான செய்திகளுக்கு பலியாக வேண்டாம்” என்று தேர்வு எழுதும் மாணவர்களிடம் கேட்டுக்கொண்டார். (யாழ் நியூஸ்)



Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.