பொசன் தான உணவு சமைக்கும் போது பாத்திரத்துக்குள் வீழ்ந்து சிறுமி சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

பொசன் தான உணவு சமைக்கும் போது பாத்திரத்துக்குள் வீழ்ந்து சிறுமி சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு!


பொசன் தானசாலையொன்றில் வைக்கப்பட்டிருந்த உணவு சமைக்கும் இரும்பு பாத்திரத்திற்குள் வீழ்ந்து காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த சிறுமி நேற்று (02) உயிரிழந்துள்ளதாக பாணந்துறை தெற்கு பொலிஸார் தெரிவித்தனர்.


பாணந்துறை பிரதேசத்தைச் சேர்ந்த 09 வயதுடைய சிறுமியே உயிரிழந்துள்ளார்.


இவர் கடந்த 23 ஆம் திகதி பொசன் பௌர்ணமி தினத்தை முன்னிட்டு பாணந்துறை பிரதேசத்தில் ஏற்பாடு செய்திருந்த உணவு பொதி தானசாலையொன்றில் கலந்துகொண்டிருந்த போது அங்கு வைக்கப்பட்டிருந்த உணவு தயாரிக்கும் இரும்பு பாத்திரமொன்றில் தவறி வீழ்ந்து காயமடைந்துள்ளார்.


இதனையடுத்து இவர் பாணந்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் மேலதிக சிகிச்சைக்காகக் கொழும்பு சீமாட்டி சிறுவர் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.


கொழும்பு சீமாட்டி சிறுவர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த இவர் நேற்று உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.


Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.