அதி சொகுசு பேருந்து விபத்தில் 40 பேர் படுகாயம்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

அதி சொகுசு பேருந்து விபத்தில் 40 பேர் படுகாயம்!


நுவரெலியா பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட நுவரெலியா - கண்டி பிரதான வீதியின் டொப்பாஸ் எனும் பகுதியில் அதி சொகுசு பேருந்து இன்று (11) அதிகாலை 4.30 மணியளவில் விபத்துக்கு உள்ளானது.


இந்த பேரூந்து விபத்தில் சிக்கியதில், 40 பயணிகள் காயங்களுக்கு உள்ளான நிலையில் சிகிச்சைக்காக நுவரெலியா மாவட்ட  வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என  நுவரெலியா பொலிஸார் தெரிவித்தனர்.


அவர்களில்  07 பேர் அவசர சிகிச்சை பிரிவிலும் ஏனைய 33 பேர் சாதாரண சிகிச்சை பிரிவிலும் அனுமதித்துள்ளதாக  நுவரலியா மாவட்ட வைத்தியசாலை பணிப்பாளர் தெரிவித்தார்.


நுவரெலியா தனியார் விடுதி ஒன்றிலிருந்து 42 பயணிகள்  திருகோணமலைக்கு  சுற்றுலாப் பயணம் மேற்கொண்டு அதி சொகுசு பேரூந்தில் பயணித்துள்ளனர்.


குறித்த பேரூந்து நுவரேலியா - கண்டி பிரதான வீதியில் டொப்பாஸ் பகுதியில் சென்ற போது திடீரென ஏற்பட்ட கோளாறு காரணமாக நடு வீதியில்  விபத்துக்கு உள்ளாகியுள்ளது.


அதேநேரத்தில் பேரூந்தை செலுத்திய சாரதி சாமர்த்தியமாக பேரூந்தை வீதி பாதுகாப்பு தடையில் மோதி பாரிய விபத்தை தடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


இவ்விபத்து  தொடர்பாக மேலதிக விசாரணைகளை நுவரேலியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.