சாதாரண தரப் பரீட்சையின் ஆங்கில பாடம் தொடர்பில் பரீட்சை திணைக்களத்தின் முக்கிய அறிவிப்பு!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

சாதாரண தரப் பரீட்சையின் ஆங்கில பாடம் தொடர்பில் பரீட்சை திணைக்களத்தின் முக்கிய அறிவிப்பு!


இம்மாதம்  நடைபெற்ற 2023 க.பொ.த சாதாரண தர பரீட்சையின் ஆங்கில மற்றும் விஞ்ஞான பாடங்களின் முறைகேடுகள் தொடர்பில் எழுந்துள்ள கவலைகளுக்கு பரீட்சை திணைக்களம் தனது முடிவை அறிவித்துள்ளது.


அதன்படி, விஞ்ஞானப் பரீட்சை தாளில் உள்ள சில கேள்விகள் பாடத்திட்டத்திற்கு வெளியே இருப்பது கண்டறியப்பட்டது. விஞ்ஞான பரீட்சை குழப்பகரமான வினாக்களுக்கு மாத்திரம் கருணை புள்ளிகள் வழங்கப்படும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்திருந்தார்.


இதேவேளை, ஆங்கிலப் பரீட்சை வினாத்தாள்களை இரத்துச் செய்ய வேண்டிய தேவை இல்லை எனவும் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அறிவித்துள்ளார்.


கடந்த வாரம் நடைபெற்ற கல்வி பொதுத் தராதர சாதாரணதரப் பரீட்சையின் ஆங்கில மொழி வினாத்தாள் பரீட்சையின் போது வட்ஸ்அப் ஊடாக பகிரப்பட்டமை கண்டுபிடிக்கப்பட்டது.


ஆங்கிலப் பாட வினாத்தாள் விடைகளை பெறுவதற்கு வட்ஸ்அப்  ஊடாக பகிரப்பட்டுள்ளது. இது  ஆங்கில மொழி வினாத்தாளின் இரகசியத்தன்மைக்கு பாதிப்பை ஏற்படுத்தவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.


Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.