பயணித்து கொண்டிருந்த பஸ்ஸின் சாரதி திடீர் மரணம்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

பயணித்து கொண்டிருந்த பஸ்ஸின் சாரதி திடீர் மரணம்!


நுவரெலியாவிலிருந்து நாவலப்பிட்டி நோக்கி பயணித்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ் ஒன்றின் சாரதி நேற்று (15) இரவு 7:30 மணியளவில் திடீர் மரணம் அடைந்துள்ளார். 


குறித்த பஸ் நுவரெலியாவிலிருந்து நாவலப்பிட்டி நோக்கி பயணிக்கும் போது நுவரெலியா - தலவாக்கலைக்கு செல்லும் வழியில் மட்டுக்கலை சந்தியில் பஸ்ஸின் டயரில் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக பயணிகளை இறக்கிவிட்டு பஸ் பயணித்த போது சாரதிக்கு ஏற்பட்ட திடீர்  சுகயினம் காரணமாக அவரை லிந்துலை பிரதேச வைத்தியசாலைக்கு கொண்டு சென்றுள்ளனர். 


அங்கு அவருக்கு வழங்கப்பட்ட சிகிச்சை பலனின்றி சாரதி உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை தரப்பினர் தெரிவிக்கின்றனர். 


சடலம் பிரேத பரிசோதணைக்காக நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை லிந்துலை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர். 


சம்பவத்தில் மரணித்த சாரதி 39 வயதுடைய கம்பளை பிரதேசத்தைச் சேர்ந்தவர் என்பதும் குறிப்பிடதக்கது.


Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.