இரு வீடுகளில் திருடிய குற்றச்சாட்டில் 15 வயது சிறுவன் கைது!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

இரு வீடுகளில் திருடிய குற்றச்சாட்டில் 15 வயது சிறுவன் கைது!


கண்டி - கலஹா நகரில் நேற்று (12) இரவு நகரில் உள்ள இரு வீடுகளையும் ஒரு வியாபார நிலையமும் உடைத்து திருடப்பட்ட சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.


கலஹா நகரில் உள்ள ஒரு வீட்டில் 4 பவுன் பெறுமதியான தாலிகொடி, மற்றுமொரு வீட்டில் துவிச்சக்கர வண்டி மற்றும் வியாபார நிலையத்தை உடைத்து கையடக்க தொலைபேசி ஆகியவற்றை சிறுவன் திருடி சென்றுள்ளான்.


இதனை தொடர்ந்து கலஹா பொலிஸ் நிலையத்தில் சம்பந்தப்பட்ட உரிமையாளர்கள் முறைப்பாட்டு செய்ததையடுத்து, கலஹா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சமன் குனசேகர தலைமையில் குற்றத்தடுப்பு பிரிவினர் உடனடியாக செயற்பட்டு சந்தேக நபரை கைது செய்துள்ளனர்.


பொருட்களை திருடிய நில்லம்பை பகுதியைச் சேர்ந்த 15 வயது சந்தேக நபரான சிறுவனை கலஹா ஆரேக்கர் மைதானத்தில் இருந்த போது கைது செய்துள்ளனர்.


கைது செய்து விசாரணையின் போது பொலிஸார் பொருட்கள் மீட்டுள்ளனர். 


இன்று சந்தேக நபர் கலஹா பொலிஸாரால் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.


Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.