மண்டியிட வைத்து முரட்டுத் தனமாக பெண்களிடம் கொள்ளையடிக்கும் கும்பல் தொடர்பில் அவதானம்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

மண்டியிட வைத்து முரட்டுத் தனமாக பெண்களிடம் கொள்ளையடிக்கும் கும்பல் தொடர்பில் அவதானம்!


பாணந்துறை, கல்கிஸ்ஸை மற்றும் நுகேகொடை பகுதிகளில் வீதியில் செல்லும் பெண்களிடம் கத்தியை காட்டி மிரட்டி மண்டியிட வைத்து கொள்ளையிடும் நபர்களால் பிரதேச அச்சமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.


இந்த நபர்கள் கடந்த ஒரு மாதத்திற்குள் சுமார் 40 கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


மொரகஹஹேன, கெஸ்பேவ, பிலியந்தலை, பொரலஸ்கமுவ, கஹதுடுவ, கடுவெல, தெபுவன போன்ற பிரதேசங்களில் இடம்பெற்ற கொள்ளைச் சம்பவங்கள் தொடர்பில் பல முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.


பொதுமக்களிடம் இருந்து இரு சக்கர வாகனங்களை வலுக்கட்டாயமாக பறித்துக்கொண்டு வாகனத்தை பயன்படுத்தி திருடர்கள் மோட்டார் சைக்கிள்களை வேறு பகுதிகளில் விட்டுவிட்டு கொள்ளையில் ஈடுபடுவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 


இந்த கொள்ளைச் சம்பவங்கள் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் சிலர் கைது செய்யப்பட்ட போதிலும், பல பகுதிகளில் கொள்ளைச் சம்பவங்கள் தொடர்ந்தும் இடம்பெற்று வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. (யாழ் நியூஸ்)



Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.