லொறி மோதியதில் 2 வயது குழந்தை பரிதாப பலி!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

லொறி மோதியதில் 2 வயது குழந்தை பரிதாப பலி!


லொறியில் மோதுண்டு விபத்துக்குள்ளான 2 வயது குழந்தை உயிரிழந்த துயர சம்பவம் நேற்று (06) இரவு இடம்பெற்றுள்ளது. 


அம்பாறை - பிபில பிரதான வீதியில் உள்ள நாமல் ஓயா பிரதேசத்தில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. 


அதே பகுதியை சேர்ந்த பெற்றோர் தமது 2 வயது 7 மாதமேயான குழந்தையோடு அருகில் உள்ள விகாரையில் நடைபெற்ற சமய நிகழ்வுகளில் கலந்துகொண்டு வழிபாட்டில் ஈடுபட்டிருந்த வேளையில், குழந்தை பெற்றோரிடமிருந்து நீங்கி வீதிக்குச் சென்றபோதே விபத்தில் சிக்கியுள்ளது. 


விபத்தில் படுகாயமடைந்த குழந்தையை பெற்றோர் இங்கினியாகலை வைத்தியசாலைக்கு கொண்டு சென்றதன் பின்னரே குழந்தை உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 


இந்த விபத்துடன் தொடர்புடைய லொறியின் சாரதியை இங்கினியாகலை பொலிஸார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.