14 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை; 17 வயது சிறுவன் கைது!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

14 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை; 17 வயது சிறுவன் கைது!


மஹரகமவில் சிறுமி ஒருவரை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய குற்றச்சாட்டின் பேரில் 17 வயது சிறுவன் கைது செய்யப்பட்டுள்ளார். 


14 வயது சிறுமியை பாரிய பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டின் பேரில் பாடசாலை மாணவர் கைது செய்யப்பட்டுள்ளதாக  லங்காதீப நாளிதழ் தெரிவித்துள்ளது .


சந்தேகநபர் மற்றும் பாதிக்கப்பட்டவர்கள் மஹரகமவில் உள்ள பிரபல பாடசாலைகளில் பயிலும் மாணவர்கள் எனவும், கடந்த வருடத்தில் காதல் வயப்பட்டவர்கள் எனவும் மஹரகம பொலிஸார் தெரிவித்தனர்.


இருவரும் பாடசாலை அல்லது டியூஷன் வகுப்புக்கு செல்லும் வழியில் ஒன்றாக நேரத்தை செலவிட்டுள்ளதாக போலீசார் மேலும் தெரிவித்தனர்.


சிறுமி, வீட்டில் தனியாக இருந்த நிலையில், சிறுவனை தனது வீட்டிற்கு வரவழைத்துள்ளதாகவும், அதன் போது அவர் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளதாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது. (யாழ் நியூஸ்)


Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.