கொழும்பில் ஒரு மாத காலத்துக்கு மூடப்படவுள்ள வீதிகள்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

கொழும்பில் ஒரு மாத காலத்துக்கு மூடப்படவுள்ள வீதிகள்!


கொள்ளுப்பிட்டி கொம்பனி வீதி பொலிஸ் பிரிவுகளில் உள்ள உத்தரானந்த மாவத்தை, பெரஹர மாவத்தை மற்றும் நவம் மாவத்தை, நீர் வெளியேறும் குழாய் அமைப்பதன் காரணமாக தற்காலிகமாக மூடப்படும் என பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.


இந்த கழிவு நீர் வெளியேற்றப்படும் குழாய் கொழும்பு துறைமுக நகரத்துடன் இணைக்கப்படும் எனவும், உத்தரானந்த மாவத்தை, பெரஹர மாவத்தை மற்றும் நவம் மாவத்தையில் வசிப்பவர்கள் வீதியை பயன்படுத்துவதை தவிர்க்குமாறு பொலிஸார் அறிவித்துள்ளனர்.


அதன்படி, உத்தரானந்த மாவத்தை, நவம் மாவத்தையில் இருந்து புகையிரத கடவை வரையான பகுதி திங்கட்கிழமை (05) முதல் (19) வரை மற்றும் உத்தரானந்த மாவத்தை, பெரஹர மாவத்தை முதல் நவம் மாவத்தை வரையிலான பகுதி பெப்ரவரி (20) முதல் மார்ச் (04) வரையிலும் உத்தரானந்த மாவத்தை, பெரஹர மாவத்தை, ரொட்டுண்டா தோட்டம் சந்தி வரையான பகுதி மார்ச் (05) முதல் மார்ச் (11) வரை தற்காலிகமாக மூடப்படவுள்ளதுடன், மாற்று வழிகளைப் பயன்படுத்துமாறு பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.


Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.