இன்று பொன் விழாவுக்காக விழாக்கோலம் பூண்டுள்ள ஜாமியா நளீமியா!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

இன்று பொன் விழாவுக்காக விழாக்கோலம் பூண்டுள்ள ஜாமியா நளீமியா!


இலங்கை உட்பட உலகின் பல்வேறு நாடுகளில், பல்வேறு நிறுவனங்களில், பல்வேறுபட்ட அரச உயர் பதவிகளில் தலைவர்களை உட்கார வைத்த ஒரு ஆசான், படிக்காத மேதை நழீம் ஹாஜியார்.


அல்லாஹ்விடம் அவர் கேட்ட ஒரு துஆ...


"யா அல்லாஹ் என் சமூகத்திற்கு வாரி வழங்குவதற்கு அழியா செல்வத்தையும் அதை வாரி வழங்கும் மனப்பக்குவத்தையும் வழங்குவாயாக, யா அல்லாஹ் செல்வத்தையும் கருமையான மனதையும் தந்து விடாதே றஹ்மானே" என்பதாகும்.


அந்தப் பிரார்த்தனையை அல்லாஹ் அங்கீகரித்தான். அதற்கு இணங்க அல்லாஹ்வின் உதவியை கொண்டு கொடை வள்ளல் நழீம் ஹாஜியார் அவர்களால் நிறுவப்பட்டு,  முஸ்லிம் சமூகத்திற்கு அன்பளிப்பு செய்யப்பட்ட ஜாமியா நளீமியா இன்று சமூகத்தை தாங்கி நிற்கும் ஒரு தூணாக கம்பீரத்துடன் எழுந்து நிற்கின்றது.


அந்த படிக்காத மேதையால் அறிவின் பொறுமதியை கண்டறிந்தது உருவாக்கப்பட்ட ஜாமியா நளீமியா இன்று அதன் 50-வது வருட பொன்விழாவை கொண்டாட விழா கோலம் பூண்டுள்ளது.


இதற்காக பல சமூக முக்கியஸ்தர்கள் இவ்விழாவில் கலந்து கொள்ள  அழைக்கப்பட்டுள்ளதோடு,  நல்லுள்ளம் கொண்ட சமூக அங்கத்தவர்களையும் அதன் நிர்வாகிகள் இன்று வருக வருக என வரவேற்கின்றனர்.


-பேருவளை ஹில்மி


Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.