யாழ் ஆவா குழுவின் தலைவர் கைது!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

யாழ் ஆவா குழுவின் தலைவர் கைது!

யாழ்ப்பாணத்தில் பல குற்றச்செயல்களுடன் தொடர்புடைய 'ஆவா' குழுவின் தலைவர் என சந்தேகிக்கப்படும் நபரை வலான ஊழல் ஒழிப்புப் பிரிவினர் கைது செய்துள்ளனர்.


வலான ஊழல் ஒழிப்பு செயலணியின் பணிப்பாளர் சாமிக்க விக்கிரமசிங்கவின் உத்தரவின் பேரில் பிரதம பொலிஸ் பரிசோதகர் இந்திக்க வீரசிங்க தலைமையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.


கல்கிஸ்ஸை யசோரபுர பகுதியில் உள்ள இரண்டு மாடி வீடொன்றின் மேல் மாடியில் தங்கியிருந்த போதே சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.


இவர் வெளிநாட்டிற்கு தப்பிச் செல்லும் நோக்கில் இவ்வாறு கல்கிஸ்ஸை பகுதியில் தங்கியிருந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதாக பொலிஸார் மேலும் தெரிவிக்கின்றனர்.


ஐஸ் போதைப்பொருள் பாவனைக்கு அதிகளவில் அடிமையாகியுள்ள நிலையில், கைது செய்யப்படும் போது அவரிடம் இருந்து 1 கிராம் 300 மில்லி கிராம் ஐஸ் போதைப்பொருளும் கைப்பற்றப்பட்டுள்ளது.


Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.