ஒன்லைன் விளம்பரம் பார்த்து மோட்டார் சைக்கிள் வாங்கவந்தவர்கள் தாக்கப்பட்டு கொள்ளை!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

ஒன்லைன் விளம்பரம் பார்த்து மோட்டார் சைக்கிள் வாங்கவந்தவர்கள் தாக்கப்பட்டு கொள்ளை!


பமுனுகம தெலத்துர எலபெம்ம பகுதியில் கூரிய ஆயுதங்களால் மூவர் தாக்கப்பட்டுள்ளதுடன், அவர்களின் பணம் மற்றும் தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளன.


இணையத்தில் வெளியான விளம்பரத்துக்கு அமைய மோட்டார் சைக்கிள் வாங்குவதற்காக லொறியில் வந்த மூவரே இவ்வாறு தாக்கப்பட்டதாக  பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


வீதியில் மறைந்திருந்த நால்வர் இந்த தாக்குதலை மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன், 132,000 ரூபாய் பணம், 5 அலைலைபேசிகள், தங்க நகை மற்றும் வளையல் என்பவற்றை திருடிக்கொண்டு தப்பிச் சென்றுள்ளனர்.


தாக்குதலில் காயமடைந்தவர்கள் ராகம வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும், கொள்ளைச் சம்பவத்தை மேற்கொண்ட சந்தேக நபர்கள் பமுனுகம பொலிஸாரினால் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.


Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.