விசேட தேவையுடைய சிறுவர்கள் தொடர்பில் கல்வி அமைச்சு எடுத்துள்ள தீர்மானம்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

விசேட தேவையுடைய சிறுவர்கள் தொடர்பில் கல்வி அமைச்சு எடுத்துள்ள தீர்மானம்!

ministry of education sri lanka

விசேட தேவையுடைய சிறுவர்களை வலயக் கல்வி பணிமனையில் பதிவு செய்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.


குறித்த சிறுவர்களுக்கு முறையான கல்வியை வழங்கும் நோக்கில் இந்த நடவடிக்கை கட்டாயமாக்கப்பட்டுள்ளது. 


அத்தகைய சிறுவர்களின் விசேட தேவைகளை கருத்தில் கொள்வதற்கு வலய மட்டத்தில் நூறு மதிப்பீட்டுக்கு குழுக்கள் நிறுவப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.


இந்நிலையில், குறித்த சிறுவர்களை உரிய வயதில் பாடசாலைகளுக்கு முதலாம் தரத்திற்கு சேர்ப்பது தொடர்பான பாடத்திட்டத்தையும் அமைச்சு தயாரித்து மதிப்பீட்டுக் குழுக்களுக்கு வழங்கியுள்ளது.


இதன்படி, டிசெம்பர் 01 திகதி முதல் பதிவு செய்யப்படும் சிறுவர்கள் பாடத்திட்டத்தின் படி கற்பிக்கப்படுவார்கள் எனவும், வெளிப்படுத்தும் ஆற்றலுக்கு அமைய முதலாம் தரத்திற்கு உள்வாங்கப்படுவார்கள் எனவும் கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.


கடுமையானக பாதிக்கப்பட்ட சிறுவர்களுக்கு வீட்டில் கற்பிக்கும் திட்டம் செயல்படுத்தப்படும் எனவும், அத்தகைய மூன்று சிறுவர்களுக்கு ஒரு ஆசிரியர் பணியமர்த்தப்படுவார் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.


மேலும், சுமார் 1500 ஆசிரியர்கள் விசேட தேவையுடைய சிறுவர்களுக்காக தங்களை அர்ப்பணிப்பதற்கு பயிற்சி பெற்றுள்ளனர் எனவும் கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.


Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.