அத்தியாவசிய உணவு பொருட்களின் விலை அதிகரிப்பு!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

அத்தியாவசிய உணவு பொருட்களின் விலை அதிகரிப்பு!


பெறுமதி சேர் வரி அதிகரிப்பால், பல அத்தியாவசிய நுகர்வுப் பொருட்களின் விலைகள் உயர்ந்துள்ள  நிலையில், உருளைக்கிழங்கு, பருப்பு, சீனி, வெங்காயம், கோதுமை மா மற்றும் சில அரிசி வகைகளின் விலைகள் மேலும் அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.


பெறுமதி சேர் வரி உயர்வுக்கு முன்னர் 300 ரூபாவாக இருந்த ஒரு கிலோ கிராம் பருப்பின் விலை தற்போது 350 ரூபாவாக அதிகரித்துள்ளது.


மேலும் சில பகுதிகளில் 290 ரூபாவாக இருந்த ஒரு கிலோ கிராம் சீனியின் விலை 320 ரூபாவாகவும் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.


VAT என்ற போர்வையில் சில வர்த்தகர்கள் கட்டுப்பாடற்ற வகையில் பொருட்களின் விலைகளை அதிகரித்துள்ளதாக நுகர்வோர்கள் தெரிவிக்கின்றனர்.


Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.