தெஹிவளை - பாபக்கர் பள்ளிவாசல் விடயத்தில் கலாச்சார அமைச்சு, வக்பு சபை ஆகியவற்றின் நடவடிக்கைகள் குறித்து நாளை 10 ஆம் திகதி நடைபெறவிருந்த ஆர்ப்பாட்டம் தற்காலிகமாக இடை நிறுத்தப்பட்டது.
நேற்று (08) இரவு சில சமூக முக்கியஸ்தர்கள் பொதுமக்கள் ஆகிய இரு தரப்புக்கு இடையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையின் முடிவில் இம்முடிவு எட்டப்பட்டது.
இந்தப் பிரச்சினையானது பல்வேறு கோணங்களில ஆராயப்பட்டு இதனை அடுத்து தற்போதைய நிலையில் ஆர்பாட்டத்தை தவிர்பது என்ற முடிவு எட்டப்பட்டது.
இருந்த போதிலும் கடந்த கால அசம்பாவிதங்களை கருத்தில் கொண்டு, இப்பள்ளிவாசல் ஒரு தனி தரப்புக்கோ, குறிப்பிட்ட ஒரு அமைப்புக்கோ, அல்லாமல் மஹல்லாவாசிகளால் நிர்வகிக்கப்படும் வக்பு வாரியத்தின் பூரணமான கண்காணிப்பின் கீழ் இயங்கும் ஒரு பள்ளிவாசலாக இயங்கும் வரை சட்ட நடவடிக்கைகள் தொடரும் என பொதுமக்கள் தெரிவித்தனர்.
-பேருவளை ஹில்மி