வக்பு சபைக்கு எதிரான ஆர்ப்பாட்டம் தற்காலிகமாக இடைநிறுத்தம்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

வக்பு சபைக்கு எதிரான ஆர்ப்பாட்டம் தற்காலிகமாக இடைநிறுத்தம்!


தெஹிவளை - பாபக்கர் பள்ளிவாசல் விடயத்தில் கலாச்சார அமைச்சு, வக்பு சபை ஆகியவற்றின் நடவடிக்கைகள் குறித்து நாளை 10 ஆம் திகதி நடைபெறவிருந்த ஆர்ப்பாட்டம் தற்காலிகமாக இடை நிறுத்தப்பட்டது.


நேற்று (08) இரவு சில சமூக முக்கியஸ்தர்கள் பொதுமக்கள் ஆகிய இரு தரப்புக்கு இடையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையின் முடிவில் இம்முடிவு எட்டப்பட்டது.  


இந்தப் பிரச்சினையானது பல்வேறு கோணங்களில ஆராயப்பட்டு இதனை அடுத்து தற்போதைய நிலையில் ஆர்பாட்டத்தை தவிர்பது என்ற முடிவு எட்டப்பட்டது.


இருந்த போதிலும் கடந்த கால அசம்பாவிதங்களை கருத்தில் கொண்டு,  இப்பள்ளிவாசல்  ஒரு தனி தரப்புக்கோ, குறிப்பிட்ட ஒரு அமைப்புக்கோ, அல்லாமல் மஹல்லாவாசிகளால் நிர்வகிக்கப்படும் வக்பு வாரியத்தின் பூரணமான கண்காணிப்பின் கீழ் இயங்கும் ஒரு பள்ளிவாசலாக இயங்கும் வரை சட்ட நடவடிக்கைகள் தொடரும் என பொதுமக்கள் தெரிவித்தனர்.


-பேருவளை ஹில்மி


Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.