மின் கட்டணத்தை செலுத்தும் புதிய வழிமுறைகள்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

மின் கட்டணத்தை செலுத்தும் புதிய வழிமுறைகள்!


வாடிக்கையாளர்களுக்கு புதிய தொழில்நுட்பத்திற்கு ஏற்றவாறு மின் கட்டணத்தை செலுத்துவதற்கான பல வழிமுறைகளை இலங்கை மின்சார சபை அறிமுகப்படுத்தியுள்ளது.


அதன்படி, CEBCare மொபைல் செயலி, இணைய வங்கிச் சேவைகள், CEB இணையத்தளம், தபால் அலுவலகம், CEB மற்றும் வங்கி KIOSK இயந்திரங்கள், Cargills, Keel's போன்ற பல்பொருள் அங்காடிகள், MCash போன்ற விழிமுறைகளில் மின் கட்டணங்களை செலுத்த முடியும் என இலங்கை மின்சார சபையின் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.


அத்துடன் இந்த வழிமுறைகளில் மின்சாரக் கட்டணங்களை செலுத்துவது  தொடர்பில் ஏதேனும் பிரச்சினைகள் இருந்தால் CEB நிலைய அவசர தொலைபேசி இலக்கமான 1987 தொடர்பு கொள்ளுமாறு இலங்கை மின்சார சபையின் ஊடகப் பேச்சாளர் மேலும் தெரிவித்துள்ளார்.


மேற்குறிப்பிட்ட புதிய தொழில்நுட்ப வழிமுறைகளில் ஏதேனும் ஒன்றைப் பயன்படுத்தி உரிய நேரத்தில் மின் கட்டணத்தைச் செலுத்துவதன் மூலம் தொடர்ச்சியான மின்சார விநியோகத்தை பெற முடியும் என இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.