மதத்தை இழிவுபடுத்தும் கருத்து வெளியிட்ட 'விஸ்வ புத்த' துறவி மீண்டும் கைது!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

மதத்தை இழிவுபடுத்தும் கருத்து வெளியிட்ட 'விஸ்வ புத்த' துறவி மீண்டும் கைது!


தன்னை 'விஸ்வ புத்தர்' என்று அழைத்துக் கொண்ட காவி அங்கி அணிந்த துறவி, பௌத்த மதத்தை இழிவுபடுத்தும் வகையில் அறிக்கை வெளியிட்டதற்காக மீண்டும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.


கலகெடிஹேன பிரதேசத்தில் வைத்து சந்தேக நபரை குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கைது செய்துள்ளனர்.


சந்தேகநபர் முதலில் டிசம்பர் 12 ஆம் திகதி கைது செய்யப்பட்டார், அதன் பின் அவருக்கு கொழும்பு பிரதான நீதவான் ஜனவரி 08 ஆம் திகதி பிணை வழங்கியிருந்தார்.


விடுதலையின் பின், அவர் பல ஒன்லைன் பேச்சு நிகழ்ச்சிகளில் பங்கேற்று வந்தார்.


இதேவேளை, குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் முன் அவர் அடுத்த வாரம் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாக சிரேஷ்ட ஊடகவியலாளர் சமுதித்த சமரவிக்ரம தெரிவித்துள்ளார்.


கைது செய்யப்பட்ட சந்தேக நபருடன் சமரவிக்கிரம நடத்திய நிகழ்ச்சி ஒன்றின் பொருட்டே அவர் விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளார். 


Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.