“கிரைண்டர்” செயலியை பயன்படுத்தி மிரட்டி பணம் பறித்த 5 இளைஞர்கள் கைது!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

“கிரைண்டர்” செயலியை பயன்படுத்தி மிரட்டி பணம் பறித்த 5 இளைஞர்கள் கைது!

இலங்கை மின்சார சபையில் (CEB) மீட்டர் ரீடராகப் பணிபுரியும் தனிநபரிடமிருந்து ரூ. 100,000 இனை திருடிய இளைஞர்கள் ஐவர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

சந்தேகநபர்கள் பாதிக்கப்பட்ட நபரை வில்லோராவத்தையில் உள்ள வீடொன்றுக்கு அழைத்துச் சென்றுள்ளதாகவும், பின்னர் அவரை ஆடைகளை கழற்றி அடித்து, கொள்ளையடித்துள்ளதாகவும் மொரட்டுமுல்ல பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் 17 வயதுக்கும் 20 வயதுக்கும் இடைப்பட்டவர்கள். ஒரு சந்தேக நபர் பாதிக்கப்பட்ட நபரை ஆன்லைன் டேட்டிங் செயலியான ‘கிரைண்டர்’ மூலம் உடல் மசாஜ் செய்து தருவதாக கவர்ந்துள்ளார்.

பண்டாரகம பகுதியைச் சேர்ந்த பாதிக்கப்பட்ட நபர், சந்தேகநபர் பகிர்ந்திருந்த இடத்தைப் பயன்படுத்தி வில்லோரவத்தை வீட்டிற்கு வந்துள்ளார், அதன் பின்னர் இளைஞர் தனது ஆடைகளை களைந்து, பாதிக்கப்பட்டவருக்கும் அவ்வாறே செய்ய பின்தொடர்ந்துள்ளார்.

சில நிமிடங்களின் பின்னர் ஏனைய சந்தேகநபர்கள் வீட்டுக்குள் புகுந்து பாதிக்கப்பட்ட நபரை தாக்கி, இளைஞனை பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாக குற்றம் சாட்டி, பொலிஸாருக்கு அறிவிக்குமாறும் அச்சுறுத்தியுள்ளனர்.

பாதிக்கப்பட்டவரை அச்சுறுத்திய பின்னர், சந்தேகநபர்கள் அவரது டெபிட் கார்டு மற்றும் பின் ஐப் பெற்று அதில் இருந்து ரூ. 70,000 மற்றும் அவரது கிரெடிட் கார்டைப் பயன்படுத்தி ரூ. 29,000 இனையும் பெற்றுள்ளனர். 

முறைப்பாட்டின் அடிப்படையில் விசாரணைகளை ஆரம்பித்த பொலிஸார், வில்லோராவத்தை, ரவத்தவத்தை மற்றும் லக்ஷபதிய பிரதேசங்களில் இருந்து சந்தேக நபர்களை கைது செய்துள்ளனர்.

சந்தேகநபர்கள் இராணுவ மேஜர் ஒருவரையும் பாடசாலை மாணவர் ஒருவரையும் இதேபோன்று இதற்கு முன்னரும் கொள்ளையடித்துள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.