![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiAcS6W-jm7UjV4KuRrF4jtZHo-EHdfh6nJFa8dHP0Jv57jAiizhuyqkZ8v5701Zcv-eeJtr1mOCBwWQDuB0uxMLFHoll9g3ctghW6ywAhbe5yBkw1WYwNb-9KuVLDL4AkfYgtc0qZ9roaHmX65a-takeSryGssCWzMgSIqmF3x78YMjhGxvVQCedXM0OQI/s16000/IMG_8372.jpeg)
ஐசிசி கிரிக்கெட் அகாடமியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற அரையிறுதி ஆட்டத்தில், ஐக்கிய அரபு அமீரக வீரர்கள், பூல் ஆட்டத்தில் இலங்கையை வீழ்த்தி, பின்னர் ஆசிய ஜாம்பவான்களான பாகிஸ்தானை 11 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு தெரிவாகினர்.
ஞாயிற்றுக்கிழமை துபாய் சர்வதேச கிரிக்கெட் ஸ்டேடியத்தில் நடக்கும் இறுதிப் போட்டியில், மற்றொரு அரையிறுதியில் இந்தியாவை வீழ்த்திய பங்களாதேஷ் அணியினை எதிர்கொள்கிறது.
ஜூனியர் அல்லது சீனியர் அளவிலான உயர்மட்ட போட்டியின் இறுதிப்போட்டியில் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணி இடம்பெறுவது இதுவே முதல் முறை.
"டிசம்பர் 17, ஞாயிற்றுக்கிழமை துபாய் சர்வதேச மைதானத்தில் UAE மற்றும் பங்களாதேஷ் இடையேயான ACC ஆண்கள் U19 ஆசிய கோப்பை இறுதிப் போட்டிக்கான பார்வையாளர் அரங்குகள் அனைத்து ரசிகர்களுக்கும் இலவசமாகத் திறக்கப்படும்" என்று ECB ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.