தேசபந்துவின் நியமனத்திற்கு எதிர்ப்பு தெரிவித்த சட்டத்தரணிகள் மீது பாரிய குற்றச்சாட்டு!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

தேசபந்துவின் நியமனத்திற்கு எதிர்ப்பு தெரிவித்த சட்டத்தரணிகள் மீது பாரிய குற்றச்சாட்டு!


பதில் பொலிஸ் மா அதிபராக தேசபந்து தென்னகோனை நியமித்தமைக்கு எதிர்ப்பு தெரிவித்த சில சட்டத்தரணிகள் தற்போது பிரபல போதைப்பொருள் கடத்தல்காரர்களுக்கு எதிராக நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள வழக்குகள் சார்பாக ஆஜராகியுள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சர் டிரன் அலஸ் குற்றம் சுமத்தியுள்ளார்.


இவ்வாறான வழக்குகள் மூலம் இந்த சட்டத்தரணிகள் பில்லியன் கணக்கான ரூபாவை சம்பாதிப்பதாக அமைச்சர் வெளிப்படுத்தினார்.


சில ஆட்சேபனைகள் அல்லது அழுத்தங்கள் இருந்தபோதிலும் போதைப்பொருள் மற்றும் பாதாள உலகத்தை ஒடுக்குவதற்கு தானும் பதில் பொலிஸ்மா அதிபரும் அர்ப்பணிப்புடன் இருப்பதாக அமைச்சர் அலஸ் முன்னதாக தெரிவித்தார்.


அதன்படி நேற்று நாடளாவிய ரீதியில் விசேட நடவடிக்கையொன்றை பொலிஸார் ஆரம்பித்துள்ளனர். இதன் விளைவாக, 24 மணித்தியாலங்களுக்குள் 2,000 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர், மேலும் கணிசமான அளவு போதைப்பொருட்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.


Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.