நாடளாவிய ரீதியில் மின்வெட்டு: நடந்தது என்ன?

advertise here on top
Join YazhNews WhatsApp Community

நாடளாவிய ரீதியில் மின்வெட்டு: நடந்தது என்ன?


நாடளாவிய ரீதியில் நேற்றிரவு (09) ஏற்பட்ட மின் தடை காரணமாக பொதுமக்கள் பெரும் அசௌகரியங்களுக்கு உள்ளாகினர். 


நேற்று மாலை 5:15 மணியளவில் கொத்மலை - பியகம மின்விநியோகப் பாதையில் கணினி கோளாறு ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, நாடளாவிய ரீதியில் மின்சாரத்தை முழுமையாக மீட்டெடுக்க கிட்டத்தட்ட 7 மணிநேரம் ஆனது.


கொத்மலை முதல் பியகம வரையிலான மின் விநியோக பாதையில் மின்னல் தாக்கம் காரணமாக நாடளாவிய ரீதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதாக ஆரம்ப தரவுகள் தெரிவிக்கின்றன என இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.


சம்பவம் தொடர்பில் மின்சக்தி அமைச்சு மற்றும் இலங்கை மின்சார சபையின் இருவேறு விசாரணைகள் தற்போது இடம்பெற்று வருவதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி இராஜாங்க அமைச்சர் இந்திக்க அனுருத்த பாராளுமன்றத்தில் தெரிவித்தார். (யாழ் நியூஸ்)


Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.