நீராடிக் கொண்டிருந்த பெண்ணை துஷ்பிரயோகம் செய்தவருக்கு வழங்கப்பட்ட தீர்ப்பு!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

நீராடிக் கொண்டிருந்த பெண்ணை துஷ்பிரயோகம் செய்தவருக்கு வழங்கப்பட்ட தீர்ப்பு!


வேலை முடிந்து வீட்டுக்குத் திரும்பிய திருமணமான பெண், வாவிக்குச் சென்று குளித்துக்கொண்டிருந்த போது, அப்பெண்ணை பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தினார் என குற்றஞ்சாட்டப்பட்டிருந்த நபரை குற்றவாளியாக இனங்கண்ட மேல் நீதிமன்றம் அவருக்கு கடூழிய சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.


அம்பாறையில் ஆடைத்தொழிற்சாலையில் பணியாற்றும் திருமணமான பெண்ணே, அன்றையதினம் கடமை முடிந்து நீராடிக்கொண்டிருந்த போது, சந்தேகநபர் இந்தக் குற்றத்தை புரிந்துள்ளார்.


குற்றஞ்சாட்டப்பட்டவரை குற்றவாளியாக இனங்கண்ட அம்பாறை மேல் நீதிமன்ற நீதிபதி நலிந்த ஹேவாவசம், குற்றவாளிக்கு 4 ஆண்டுகள் கடூழிய சிறைத்த​ண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.


அதற்கு மேலதிகமாக 10 ஆயிரம் ரூபாய் தண்டம் விதிக்கப்பட்டது. அதனை செலுத்த தவறினால், 3 மாதங்கள் ஒரு தளர்வான சிறைத்தண்டனையும் விதிக்கப்பட்டது. பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு 150,000 ரூபாய் நட்டஈடு வழங்குமாறும் செலுத்த தவறின் ஒரு வருடம் ஒரு தளர்வான சிறைத்தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது,


தண்டப்பணம் மற்றும் நட்டஈடு செலுத்தாவிடின் சிறைத்தண்டனைகளை தனித்தனியாக அனுபவிக்கவேண்டுமென வழங்கப்பட்டுள்ள தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.