வாகன மோசடி வழக்கில் இருந்து தொழிலதிபர் திலினி பிரியமாலி விடுவிப்பு!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

வாகன மோசடி வழக்கில் இருந்து தொழிலதிபர் திலினி பிரியமாலி விடுவிப்பு!


தொழிலதிபர் திலினி பிரியமாலி, வாகனம் கொள்வனவு தொடர்பில் பாரிய நிதி மோசடியில் ஈடுபட்டதாகக் குற்றம் சுமத்தப்பட்ட வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார்.


சுமார் 8 மில்லியன் பெறுமதியான வாகனத்தை கொள்வனவு செய்வதற்கு போதிய நிதியில்லாமல் வங்கிக் கணக்கிலிருந்து காசோலையை வழங்கியதாக திலினி பிரியமாலி மீது குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.


வாகனத்தை கொள்வனவு செய்வதற்கு போதிய நிதியின்றி காசோலையை வழங்கியமைக்காக குற்றவியல் நம்பிக்கை மீறலில் ஈடுபட்டதாக வர்த்தகப் பெண்ணுக்கு எதிராக சட்டமா அதிபர் வழக்குத் தாக்கல் செய்துள்ளார். 


எவ்வாறாயினும், இந்த வழக்கு கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி ஆதித்ய படபெந்திகே முன்னிலையில் நேற்று திங்கட்கிழமை (11) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டதை அடுத்து அவர் வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டார். (யாழ் நியூஸ்)


Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.