வெளிநாட்டு பெண் சுற்றுலா பயணி மீது பாலியல் துஷ்பிரயோக முயற்சி செய்த தேரர் கைது!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

வெளிநாட்டு பெண் சுற்றுலா பயணி மீது பாலியல் துஷ்பிரயோக முயற்சி செய்த தேரர் கைது!


ஹப்புத்தளை மாகிரிபுர பிரதேசத்தில் உள்ள விகாரையில் 17 வயதுடைய தேரர் ஒருவர் வெளிநாட்டு பெண் சுற்றுலா பயணி மீது பாலியல் துஷ்பிரயோகம் செய்ய முயற்சித்ததாக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டதாக  பொலிஸார் தெரிவித்தனர்.


ஹப்புத்தளை வெலிமடை வீதியில் உள்ள மகிரிபுர பிரதேசத்தில் அமைந்துள்ள விகாரைக்கு வருகை தந்த 26 வயதான போலந்து நாட்டை சேர்ந்த பெண் ஒருவரே சந்தேக நபரான தேரர் தன்னை துஷ்பிரயோகம் செய்ததாக முறைப்பாடு செய்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.


விசாரணையின் பிரகாரம் சந்தேக நபரான தேரர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.


பண்டாரவளை பொலிஸ் பிரிவுக்கு பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் பிரதீப் களுபஹனவின் ஆலோசனையின் பேரில் ஹப்புத்தளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


சந்தேக நபரை இன்றைய தினம் பண்டாரவளை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு பொலிஸார் தெரிவித்தனர் வருவதாக ஹப்புத்தளை பொலிசார் தெரிவித்தனர்.


Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.