மதுபோதையில் வாகனம் செலுத்திய நபருக்கு பிணைக் கைச்சாத்திட மதுபோதையில் சென்றவர் கைது!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

மதுபோதையில் வாகனம் செலுத்திய நபருக்கு பிணைக் கைச்சாத்திட மதுபோதையில் சென்றவர் கைது!


கண்டி தலைமையக பொலிஸ் நிலையத்தில் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரை தாக்கியதாக கூறப்படும் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.


குறித்த நபர் அதிக மதுபோதையில் பொலிஸ் தலைமையகத்துக்குள் நுழைய முற்பட்டபோது, அவரைத் தடுக்க பொலிஸ் உத்தியோகத்தர் நடவடிக்கை எடுத்த நிலையிலேயே இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.


தாக்குதலுக்கு உள்ளான பொலிஸ் உத்தியோகத்தர் சிகிச்சைக்காக கண்டி தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.


மதுபோதையில் வாகனம் செலுத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட நபருக்கு பொலிஸ் பிணையில் கைச்சாத்திடுவதற்காக குறித்த நபர் அதிக மதுபோதையில் பொலிஸ் தலைமையகத்துக்குள் நுழைய முற்பட்டபோது பாதுகாப்பு கடமையில் இருந்த பொலிஸ் உத்தியோகத்தர் அவரைத் தடுத்து நிறுத்தியபோதே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.


Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.