நிகழ்நிலைக் காப்புச் சட்டம்; உயர்நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

நிகழ்நிலைக் காப்புச் சட்டம்; உயர்நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு!


நிகழ்நிலைக் காப்பு சட்டமூலம் அல்லது அதன் விதிகள் அரசியலமைப்பிற்கு முரணானவை அல்ல என இலங்கையின் உயர் நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.


சில ஷரத்துக்களை குழுநிலையில் திருத்தங்களைத் தொடர்ந்து சட்டமூலத்தை விசேட பெரும்பான்மையால் நிறைவேற்ற முடியும் என்று நீதிமன்றம் அறிவித்துள்ளது. 


உயர் நீதிமன்றத் தீர்மானம் இன்று (07) பாராளுமன்றத்தில் பிரதி சபாநாயகர் அஜித் ராஜபக்சவினால் அறிவிக்கப்பட்டது. 


நிகழ்நிலை காப்பு சட்டமானது செப்டம்பர் 2023 இல் இலங்கை அரசாங்க வர்த்தமானியில் வெளியிடப்பட்டது.


இது வர்த்தமானியாக வெளியிடப்பட்டவுடன் இந்த சட்டமூலத்தை எதிர்த்து, குறைந்த து 45 மனுக்கள் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டன, மேலும் இது பொதுமக்களின் அடிப்படை உரிமைகளை மீறுவதாக பல விசனங்கள் எழுந்தன.


நிகழ்நிலைக் காப்புச் சட்டத்தில் சில திருத்தங்களைச் செய்ய அரசாங்கம் முடிவு செய்துள்ளதாக சட்டமா அதிபர் கடந்த ஒக்டோபர் மாதம் உயர் நீதிமன்றத்தில் அறிவித்தமை குறிப்பிடத்தக்கது.


Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.