தனக்கு எதுவும் தெரியாது; எனக்கு எவரும் அறிவிக்கவில்லை! -ஜனாதிபதி

advertise here on top
Join YazhNews WhatsApp Community

தனக்கு எதுவும் தெரியாது; எனக்கு எவரும் அறிவிக்கவில்லை! -ஜனாதிபதி


இலங்கை கிரிக்கெட் சபைக்கான இடைக்கால குழு நியமனம் தொடர்பில் அரசாங்கத்திற்கோ அல்லது தமக்கோ எதுவும் தெரியாது என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சற்று முன்னர் தெரிவித்துள்ளார். 


விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க இடைக்கால கிரிக்கெட் குழுவொன்றை நியமித்துள்ளதாக ஊடகங்களில் வெளியான செய்திகள் தொடர்பில் ஜனாதிபதியுடன் சந்திப்பிலிருந்த அமைச்சர்கள் சிலர் கேள்வி எழுப்பிய போதே  ஜனாதிபதி மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.


இடைக்கால கிரிக்கெட் குழுவிற்கு நியமிக்கப்பட்ட உறுப்பினர்களின் பெயர்கள் கூட அனுமதிக்காக விளையாட்டுத்துறை அமைச்சர் தெரியப்படுத்தப்பட வில்லை. இன்று திங்கட்கிழமை (06) மாலை நடைபெறவுள்ள அமைச்சரவை கூட்டத்தில் இந்த விடயம் குறித்து கவனத்தில் கொள்ளப்படும் என்று அரசாங்கத்தின் முக்கியஸ்தர் ஒருவர் குறிப்பிட்டார். 


கிரிக்கெட் போன்ற நிறுவனங்களுக்கு இடைக்கால குழுவை நியமிக்கும் போது ஜனாதிபதிக்கு அறிவிப்பட வேண்டும். ஆனால் இம்முறை விளையாட்டுத்துறை அமைச்சர் இந்த விடயத்தை ஜனாதிபதிக்கு தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.