கொழும்பு புறக்கோட்டை தீ; காயமடைந்த யுவதி ஒருவர் உயிரிழப்பு!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

கொழும்பு புறக்கோட்டை தீ; காயமடைந்த யுவதி ஒருவர் உயிரிழப்பு!

கொழும்பு – புறக்கோட்டை 2ஆம் குறுக்கு தெரு பகுதியிலுள்ள ஆடையகமொன்றில் 27ம் திகதி ஏற்பட்ட தீ விபத்தில் காயமடைந்த யுவதி உயிரிழந்துள்ளார்.


கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


இந்த தீ விபத்தில் காயமடைந்த  11 பெண்கள் உள்ளிட்ட 20துக்கும் மேற்பட்டோர், கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தனர்.


இந்த நிலையில், காயமடைந்தவர்களில் 6 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.


இந்த நிலையில், இந்த சம்பவத்தில் காயமடைந்த வட்டகொட கீழ்ப் பிரிவைச் சேர்ந்த யுவதியே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.


இந்த தீ விபத்து தொடர்பிலான விசாரணைகளை பொலிஸார் தொடர்ந்தும் முன்னெடுத்துள்ளனர். 


Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.