குர்ஆன் மற்றும் முஹம்மது நபியை அவதூறு பேசியதற்காக யூடியூப் பதிவாளர் இந்திக்க தொட்டவத்த மீது முறைப்பாடு!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

குர்ஆன் மற்றும் முஹம்மது நபியை அவதூறு பேசியதற்காக யூடியூப் பதிவாளர் இந்திக்க தொட்டவத்த மீது முறைப்பாடு!


இஸ்லாமிய மத நம்பிக்கை முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் மற்றும் புனித அல் குர்ஆனுக்கு எதிராக அவதூறான கருத்துகளை பதிவிட்டமைக்காக யூடியூப் வலைப்பதிவாளர் இந்திக தொட்டாவத்தவிற்கு எதிராக கொழும்பு - 02 இல் வசிக்கும் என்.எம்.தாஜுடீன் பொலிஸ் தலைமையகத்தில் எழுத்துப்பூர்வமாக முறைப்பாடு செய்துள்ளார்.


29 செப்டம்பர் 2023 அன்று sathya vlogs என்ற யூ ட்யூப் சேனலில் இந்த அவதூறான கருத்துக்களை இந்திக்கத் தொட்டவத்த பதிவேற்றியுள்ளார்.


இதன்படி, இலங்கை தண்டனைச் சட்டக் கோவையின் 120, 291A, 291B மற்றும் ICCPR சட்டத்தின் மற்றும் 3(2) ஆகிய பிரிவுகளின் கீழ் இந்திக்க தொட்ட வத்தவுக்கு எதிராக முறைப்பாடு செய்யப்பட்டது.


இவை பிணையில் விடப்பட முடியாத மற்றும் பிடியாணை இல்லாமல் கைது செய்யப்படக்கூடிய தவறுகளாகும் என்பதோடு 2 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத்தண்டனை விதிக்கப்படலாம்.


முறைபாட்டாளருடன் சிரேஷ்ட சட்டத்தரணி சிராஸ் நூர்தீன் அவர்களது அறிவுறுத்தலின் கீழ் சட்டத்தரணிகளான ஷைனாஸ் முஹம்மத் மற்றும் எம் .கே .எம். பர்ஷான் ஆகியோர் பிரதான போலீஸ் தலைமையகத்தில் போலீஸ் மா அதிபரை சந்தித்து முறைப்பாட்டுடன் கடிதமொன்றையும் கையளித்தனர் .


இது சம்பந்தமாக சட்ட முறையான நடவடிக்கை விரைவாக எடுக்கப்படும் என பொலிஸ் தலைமையகம் உறுதியளித்துள்ளது.



Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.