செரியாபாணி கப்பல் சேவை இன்றுடன் நிறுத்தம்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

செரியாபாணி கப்பல் சேவை இன்றுடன் நிறுத்தம்!


கடந்த புதன்கிழமை (18) அன்று காங்கேசன்துறை – நாகப்பட்டினம் இடையிலான பயணிகள் கப்பல் வதந்தி காரணமாக 2 மணி நேரம் தாமதமாகவே புறப்பட்டது.


யாழ்ப்பாணத்தில் இருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு கப்பல் புறப்பட தயாரான போது , கப்பலில் 2 கிலோ கிராம் தங்கம் கடத்தப்படுவதாக கடற்படையினருக்கு இரகசிய தகவல் கிடைத்துள்ளது.


அதனை அடுத்து விசாரணைகளை முன்னெடுத்த கடற்படையினர் மற்றும் சுங்க பிரிவினர், பயணிகளை கப்பலில் இருந்து இறக்கி கடுமையான சோதனைகளை முன்னெடுத்தனர். அத்துடன் கப்பலிலும் சோதனைகளை மேற்கொண்டனர்.


சந்தேகத்திற்கு இடமான முறையில் எந்த பொருட்களோ , தங்கமோ கிடைக்காத நிலையில் கப்பலில் மீண்டும் பயணிகளை ஏற்றி பயணத்தை தொடர அனுமதித்தனர்.


இந்த சோதனை நடவடிக்கையினால் கப்பல் சுமார் 2 மணி நேர தாமதத்தின் பின்னரே புறப்பட்டு சென்றுள்ளது.


அதேவேளை, வெள்ளிக்கிழமை (20) முதல் கப்பல் சேவை நிறுத்தப்பட்டு , 2024 ஆண்டு ஜனவரி மாதம் முதலே மீண்டும் சேவையை ஆரம்பிக்க உள்ளமை குறிப்பிடத்தக்கது.


Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.