கற்பிட்டி விபத்தில் ஐந்து வயது சிறுவன் பலி!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

கற்பிட்டி விபத்தில் ஐந்து வயது சிறுவன் பலி!


புத்தளம் பாலாவியிலிருந்து கற்பிட்டி நோக்கிச் சென்ற மோட்டார் சைக்கிள் லொறியை முந்திச் செல்ல முற்பட்ட போது கற்பிட்டியிலிருந்து பாலாவி நோக்கிச் சென்ற லொறியுடன் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.


குறித்த விபத்து கற்பிட்டி பாலாவி பிரதான வீதியின் நுரைச்சோலை பகுதியில் நேற்று (19) இரவு இடம்பெற்றுள்ளது.


குறித்த விபத்தில் 5 வயது சிறுவன் உயிரிழந்துள்ளதுடன் இருவர் படுகாயங்களுக்கு உள்ளாகிய நிலையில் புத்தளம் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.


குறித்த விபத்தில் பாலக்குடா பகுதியைச் சேர்ந்த வர்ணகுலசூரிய அரோன் என்ற 5 வயதுடைய சிறுவன் ஒருவரே உயிரிழந்துள்ளார்.


உயிரிழந்தவரின் சடலம் புத்தளம் ஆதார வைத்தியசாலையில் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன் லொறியின் சாரதி பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.


குறித்த விபத்துச் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை நுரைச்சோலைப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். 


Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.