குடிபோதையில் வண்டி ஓட்டி விபத்து; முன்னாள் டிஐஜி கைது!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

குடிபோதையில் வண்டி ஓட்டி விபத்து; முன்னாள் டிஐஜி கைது!


குடிபோதையில் வாகனம் ஓட்டி விபத்தை ஏற்படுத்திய சம்பவத்தை அடுத்து, ஓய்வுபெற்ற சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் ரவி செனவிரத்னவை (SDIG) கைது செய்துள்ளதாக வெள்ளவத்தை பொலிஸார் தெரிவித்தனர்.


இந்த விபத்து, மரைன் டிரைவ் பகுதியில் நேற்றிரவு (28) இடம்பெற்றுள்ளது.


மூத்த டி.ஐ.ஜி.யின் வாகனம் மற்றொரு காருடன் மோதியதில் விபத்து ஏற்பட்டது, பின்னர் சுற்றுலாப் பேருந்து மீது மோதி விபத்துக்கு உள்ளானது.  விபத்து நடந்தபோது மூத்த டிஐஜி குடிபோதையில் இருந்ததாக பொலிஸ்  வட்டாரங்கள் தெரிவித்தன. இந்த விபத்தால் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.


கைது செய்யப்பட்ட முன்னாள் சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபரை கல்கிசை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கைகளை எடுத்துள்ளதாக வெள்ளவத்தை பொலிஸார் தெரிவித்தனர்.


Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.